'குறுகத் தறித்த குறள்' என்னும் இந்நூல், முனைவர் சா.சிற்றரசு அவர்களால் எழுதப்பட்டது. 1812 ஆம் ஆண்டு முதல் பதிப்பிக்கப்பட்ட திருக்குறளுக்கு இதுவரை பல உரைகள் வெளிவந்துள்ளன. அவற்றில், இந்த நூலில் 12 குறளுக்கான உரைகள் விரிவாகவும், அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு எளிமையாகவும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நூல் மாணவர்களுக்கும், இளம் தலைமுறைக்கும், தமிழறிஞர்களுக்கும் புதிய பார்வையில் திருக்குறளைப் புரிந்துகொள்ள சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.